ஞாயிறு, 19 ஜூன், 2011

கழுதை இந்தியா என்னும் நாட்டின் பிரதமராகலாமா?

இந்தியா என்று சொல்லப்படும் என்று சொல்லப்படும் முதலாளித்துவ கட்டமைப்பை பிரதானமாக கொண்ட அரசில், ஜனநாயகம் என்றும் மக்களாட்சி என்றும் ஒரு அமைப்பு இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மக்களை ஆளுமாம், அதுவும் மக்களுக்காக ஆளுமாம், அது மக்களுடைய அரசாக இருக்குமாம். அப்படியா என்று வியப்போடு யாரும் கேட்டு விடாதீர்கள். அப்படித்தான் நடப்பதாக இங்குள்ள அதிகார வர்க்கம் பிரச்சாரம் செய்கிறது.

மக்களை ஆள தகுதி படைத்த பூரண யோக்கிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, அதன் பொருட்டு தேர்தலையும் நேர்மையாக நடத்த(என்னா பித்தலாட்டம்?) சுயேச்சையான அமைப்பு(!!!!) என்று சொல்லப்படுகிற தேர்தல் ஆணையம் நடத்துமாம்...நடத்தி......என்ன இழுவை இன்னும் படிங்க......அந்த பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குமாம்....

தேர்தல் முறையை சுறுக்கமா புரிஞ்சுக்கணுமா?

பார்த்தசாரதி(கக்கா கட்சியின் சார்பாகவும்), ஹரிஹரண்(மூத்திரம் கட்சியின் சார்பாகவும்), திருமலை(விட்டை கட்சியின் சார்பாகவும்) போட்டியிடுகின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்...

அதற்கு இவர்கள் தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் கட்டி மனுதாக்கல் செய்ய வேண்டும்..

சுயே..ச்சை அமைப்பான தேர்தல் ஆணையம், இவர்களின் சொத்து கணக்கு உள்ளிட்ட கொடுக்கப்பட்ட விபரங்களை Under the table-ஆகவோ, Upper the Table-ஒ வைத்து நீண்ட ஆய்வு நடத்தி, போட்டியிட அனுமதி வழங்கும்...

இந்த கம்முனாட்டி, மன்னிக்கவும் மதிப்பிற்குரிய வேட்பாளர்களும் தமது பிரச்சாரத்தை தொடங்குவர்.....அண்டா தரேன்( ஜெயிச்சு வந்தா தண்ணி தரமாட்டானுங்க), மிக்சி தரேன்( ஒழுங்கா மின்சாரம் வராது) னு திறந்தவெளி வேனிலேயே பயணம் செய்து, இருக்கின்ற தேர்தல் ஆணைய கண்காணிப்பின் முன்னிலையிலேயே வாக்களித்தால் லஞ்சம் தருவேன் என்று மைக்கை முழுங்குவார்கள்...ஆனால், தேர்தலுக்கு முன் பணம் வழங்குவதை மட்டும் குற்றமாக கருதி, பணமே கிடைக்காத இடத்தில் மட்டும் தேடுதல் வேட்டையை தீவிரமாக நடத்துவார்கள்...


பிரச்சாரம் முடிந்து தேர்தலும் நடக்கும்...

பார்த்தசாரதி(கக்கா கட்சியின் சார்பாக)-4 வாக்குகளும்,
ஹரிஹரண்(மூத்திரம் கட்சியின் சார்பாகவும்) - 3 வாக்குகளும்,
திருமலை(விட்டை கட்சியின் சார்பாகவும்) - 2 வாக்குகளும் பெற்றிருப்பர்...

உடனே பார்த்தசாரதி வெற்றி பெற்றதாக அறிவிக்க படுவார்..கூர்ந்து கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் வெளிப்படையாக தெரியும் ஒரு உண்மை...

பார்த்தசாரதிக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கின் எண்ணிக்கை 5, ஆதரவாக விழுந்தது 4... ஆனால், இந்த தேர்தல் முறையில் எதிராக வாக்களித்த மக்களின் மனநிலை முற்றாக நிராகரிக்கப்படுகிறது.

இந்த லட்சணத்திலான தேர்தல் முறையில்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வென்றார்.( நமக்குத்தான் வெக்கமே இல்லை, அதை ஏத்துக்க வேற செஞ்சோம்..)

இதே காங்கிரசு அமைச்சரவை கடந்த தேர்தலில் மன்மோகன் என்னும் அமெரிக்க அடிவருடியை, அடிவருடின்ன உடனே தப்ப நினைச்சுடாதீங்க..குழந்தைங்க கால்ல வருடி விடறது இல்லையா? காதலி கால்ல வருடி விடறத இல்லையா? அதை மாதிரி அன்பா வருடி விட்டிருப்பார்னு புரிஞ்சுக்கோங்க...நல்லா இருக்குல்ல இப்படி புரிஞ்சுக்கிறதுக்கு......

எங்க விட்டேன்...ஆங்..அந்த மன்மோகனை பிரதமர் வேட்பாளரா அறிவிச்சு போட்டியிட்டாங்க.....வென்றார்கள்..... இதே சகல வல்லமை படைத்த தேர்தல் முறையின் படி..


இப்ப என்னடான்னா......

கழுதை இந்திய நாட்டின் பிரதமராகும் நேரம் கனிந்திருக்கிறது என்று திக்விஜய்சிங் கூறியிருக்கிறார்...

ஏன் கழுதை ஆனா ஒத்துக்க மாட்டீங்களோ.....மக்களாட்சியில் இதெல்லாம் சகஜம்தானே..ஐந்தாண்டுக்கு ஒரு முறை வாக்களித்ததோடு உங்களிடம் கருத்து கேட்பது முடிந்துவிட்டதே.....இனி உங்ககிட்ட என்ன மசிறுக்கு கேட்கணும்..நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் பலத்தை வைத்து.....இனி கழுதையை கூட பிரதமர் ஆக்குவாங்க...கம்முனு கிடக்கணும்...


கழுதையோட பெயர் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறீங்களா? யோவ் கழுதை எப்படியா பிரதமர் ஆகும்னு நீங்க கேக்குற கேள்வி எனக்கு புரியுது...

கழுதைக்கு பதிலா...இந்திய நாட்டின் ஒரே விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்தான் பிரதமராகும் தகுதியோடு இருக்கிறாராம்...

செய்தி:
பிரதமர் பதவியில் ராகுல்: திக்விஜய் சிங்


கருத்துகள் இல்லை: