செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மார்க்ஸ் - ஜென்னி




உன்னுடைய நிரந்தர இருப்புக்காக எனது இதயம் எப்படி ஏங்குகிறது தெரியுமா?ஆசையாலும், மகிழ்ச்சியாலும் எவ்வளவு துடிக்கிறது தெரியுமா? நீ எங்கே செல்கிறாயோ அங்கெல்லாம் எவ்வளவு ஆவலாக பின் தொடர்ந்து செல்கிறது தெரியுமா? நான் உன்னோடு வருவேன் முன்னேறிச் செல். பின்னாலேயே நான் வருவேன் உனது பாதைகளில் உள்ள தடைகளை எல்லாம் அகற்றி, அதை சுகமானதாக்க முடிந்தால் இன்னும் மகிழ்வேன் - ஜென்னி 

அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதாகத் தெரிகிறது. இதைப் பற்றி என்ன நினைப்பது? எதிலும் ஒரு தீவிரம் என்பதை நல்லபடியாக எடுத்துக் கொள்வதா? அல்லது நமது லட்சியத்தை அடைய இன்னும் வெகுதூரம் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதா?”- ஜென்னி, மக்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகள் தொடர்பாக…. 

"வாழ்வதற்கும் எழுதுவதற்கும் எழுத்தாளன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால், சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ, எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து கருவி அல்ல. அது தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு. தேவைப்பட்டால் எழுத்து ஜீவித்திருக்க தனது ஜீவிதத்தையும் அவன் தியாகம் செய்வான்." – மார்க்ஸ்

"மரம் பற்றி சட்டம் இயற்றும் போது இவர்கள் மரத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். ஒவ்வொரு பொருளியல் பிரச்சினையையும் அரசியல் ரீதியாக தீர்க்க மாட்டேன் என்கிறார்கள். பிரச்சினையை அதன் ஒட்டுமொத்தமான சிவில் சமுதாய நோக்கு மற்றும் ஒழுக்கவியலில் இருந்து தீர்க்க மாட்டேன் என்கிறார்கள்." – மார்க்ஸ்

இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நிறைவைத் தந்திருக்கிறது கார்ல். சக மனிதனின் உயர்வுக்குப் பாடுபடுபவனே சிறந்த மனிதன். அதுபோன்ற வேலையில் கிடைக்கும் சந்தோஷமும் நிம்மதியும் வேறு எதிலும் கிடைக்காது என்று நீதானே சொல்லியிருக்கிறாய். நாம் இருவரும் அந்த வாழ்க்கையைத்தானே விரும்பி வாழ்ந்திருக்கிறோம். – ஜென்னி

கருத்துகள் இல்லை: