வியாழன், 6 பிப்ரவரி, 2014

வைகோ + காவி கும்பலின் ஈழ ஆதரவு லட்சணம்

இலங்கையை இந்தியாவோடு இணைக்கும் தீர்மானத்தை இலங்கை தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். – சு.சாமி (1-5-2000)

தீர்வுக்கான எந்த உத்தரவாதமும் பெறாமல் இலங்கை அரசுக்கு உதவி செய்வதன் மூலம், ஈழத்தமிழர்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்கின்றது. சு.சாமி 3-5-2000

“சிலர் தனி ஈழம் கோருகின்றார்கள், எங்கே இருக்கின்றது ஈழம்? புலிகளே அதை இன்னும் அறிவிக்கவில்லையே” – கிருஷ்ணமூர்த்தி ( பாஜக, துணைத்தலைவர்) தில்லியில் 6-5-2000

திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. – பிரமோத் மகாஜன்

ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. – 8/05/2000 அன்று வாஜ்பாய் (அண்ணன் வைகோவின் அண்ணன்)

அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அதில் நார்வோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்கும் இருக்கின்றது. - லட்சுமண் கதிர்காமர் 22-5-2000

இலங்கை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பாமக கட்டுப்படும் – ராமதாஸ் (2-6-2000)

நீண்டகால நண்பனான இந்தியாவை புரிந்து கொள்வதுதான் இலங்கை பிரச்சினையை தீர்க்க உதவி புரியும். – திருச்சியில் ஆறுமுக தொண்டைமான், முன்னாள் இலங்கை அமைச்சர், 2-6-2000

இந்திய அரசு தற்போதைய சூழலை பயன்படுத்தி, பிரபாகரனையும், பொட்டுஅம்மானையும் கைது செய்ய வேண்டும். – சு.சாமி (2-6-2000)

செக் – ஸ்லோவேகியா போல இலங்கை பிரிக்கப்பட வேண்டும். கலைஞர் கருணாநிதி 4-6-2000

இந்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. 5-6-2000

செக்-ஸ்லோவேகியா பாணியில் என்று கருத்து கூறிய கருணாநிதி குழம்பி போயிருக்கின்றார். ஜி.கே.முப்பனார் (7-6-2000)

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிக்கை வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் பாஜகவுக்கு தெரியாது. அப்படியே, கோரிக்கை வைக்கப்பட்டாலும், புலிகள் மீதான தடையை நீக்க முடியாது. – வெங்கையா நாயுடு (11-5-2000)

புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். - அத்வானி (14-5-2000)

அவர்களை தனி ஈழத்தையும் காண விரும்பவில்லை, இலங்கை அரசுக்கும் உதவ விரும்பவில்லை. தற்போதைய நிலையில் இந்தியாவின் நிலை குழப்பத்திற்குரியதாகவே இருக்கின்றது. - தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்புவில் (28-5-2000)

நான் இந்துத்வ சக்திகளை எதிர்க்கிறேன். நான் சிறையிலிருந்த பொழுது, அவர்கள் தங்களது ரகசிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்வதை அறிந்தேன். திராவிட இயக்கத்தை வலுப்படுத்த, பாஜகவை எதிர்ப்பது என் முதன்மை கடமையாகின்றது. காங்கிரஸை பொறுத்தவரை அது ஒன்றிரண்டு தவறிழைத்திருந்தாலும், அது மதச்சார்பின்மையை உறுதியாய் பேணுவதில் அக்கறையோடு இருக்கின்றது. ஆகவே, நாட்டின் நலன் கருதி நான் காங்கிரஸை ஆதரிக்கிறேன். - வைகோ (2004)

--------------------------------------------------------------------------------
8 ஜனவரி 2011 ஆம் ஆண்டு கௌகாத்தியில்(அஸ்ஸாம்) பாஜகவின் தேசிய செயற்குழுவில் பேசிய நிதின் கட்கரி...

"புலிகளை தோற்கடித்த போருக்கு பிறகு, இலங்கை தன்னை மீண்டும் கட்டமைத்து வருகின்றது. மக்கள் மீள் குடியிருப்பிற்காக காத்திருக்கின்றார்கள். அவர்கள் சுயமரியாதையோடு மைய நீரோட்டத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும்."

யாழ் கோட்டையில் புலிகள் முற்றுகையிட்டிருந்த போது..மே மாதம் 4 (4-5-2000) ஆம் தேதி ஜஸ்வந்த் சிங், பாஜக அமைச்சரவையின் வெளியுறவு துறை அமைச்சர் ராஜ்யசபையில் உரையாற்றும் போது

" இலங்கையில் நிகழ்ந்து வரும் மாற்றம் எங்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கின்றது. நாங்கள் இலங்கையோடு தொடர்பில் இருக்கின்றோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதியான வழியில் தீர்வையெட்ட இந்திய அரசு முயற்சியை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்

ஆக, புலிகள் வலுவாக இருந்த போதும், புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதும்...காவி, பாஜக கும்பல் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை...

காவிகளுக்கு சொம்பு தூக்கி கொண்டு கருப்புத் துண்டோடு...ஈழ வியாபாரம் செய்ய வருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்களே முடிவு செய்யுங்கள்..

கருத்துகள் இல்லை: