சனி, 5 ஏப்ரல், 2014

மரம்வெட்டிகளின் பங்காளிகள் மரம்வெட்டிகளே!

மாசுபட்ட சபர்மதி ஆறு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான 22 மார்ச் 2010 அன்று டி.என்ஏ நாளிதழில் வெளியான ஆவணமொன்று  இந்தியாவிலேயே அதிகமாக மாசுபட்ட மாநிலமாக குஜராத்தை அறிவிக்கின்றது,  அந்த ஆவணத்தில்,
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் ஆபத்தான கழிவுகளில் மிக அதிகபட்சமாக 29% குஜராத்தே வெளியேற்றுகின்றது, அதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரா 25% ஐ வெளியேற்றுகின்றது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் குஜராத்தை மிக அதிகமாக மாசுபட்ட மாநிலமாக அறிவிக்கின்றது. தொடர்ந்து அபாயமான கழிவுகளை வெளியேற்றுவது தொடர்ந்து அதிகரித்து வருவதிலிருந்து இந்த முடிவு எட்டப்பட்டது.

குஜராத்தில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள் மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றியோ அல்லது சுரங்கம் தோண்டுவது போன்றவற்றில் சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகின்றன. மோடியின் அமைச்சரவை சகா பாபுபாய் போக்ரியா சட்டத்திற்கு புறம்பான சுரங்க பணிகளுக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேபோல மோடி பாலூற்றி வளர்த்த மக்கள் விரோத நச்சுப்பாம்பான  அதானி மாசுக்கட்டுபாடு வாரியத்தின் அனுமதியின்றியே தமது முக்கியமான தொழில்களை நடத்தி வருகின்றார் என்பதை வாசிப்பவர்கள் ஆழ்ந்து தம் கவனத்தில் இருத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதானி கும்பலின் இந்த மோசடியை 13, ஜனவரி 2014 அன்று குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்ததோடு, அதானி கும்பலின் சிறப்பு பொருளாதார மண்டலங்களை (APSEZ) மூட  உத்தரவிட்டது. நைவால் கிராம மக்கள் சார்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த பாஸ்கர் பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. (இணைப்பு)

இந்த பொதுநல வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கு முன் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சகம் சுனிதா நாரெய்ன் தலைமையில் நிபுணர் குழு அமைத்தது.அதானியின் சிறப்பு பொருளாதார மண்டலம்  ‘75 ஹெக்டர் மாங்க்ரோவ் காடுகளுக்கு கடுமையான தீங்கை செய்திருப்பதாக’ தமது அறிக்கையில் அந்த குழு குற்றம் சுமத்தியது.  
இந்த காவி கும்பல்தான் நமக்கு முன்னேற்றம் பற்றி வகுப்பெடுக்கின்றது. அனைத்து உயிர்களையும் வணங்குவதுதான் இந்து மதத்தின் சுபாவம் பீற்றித் திரியும் இந்த கும்பல், வனங்களை மட்டும் முதலாளிகளின் காலடியில் வைப்பதன் மர்மமென்ன? ஒருவேளை இந்த காவி கும்பல் வணங்கும் உற்சவ மூர்த்தியே முதலாளிகள்தானோ?
நம் மூதாதையர்கள் வாழ்ந்து பாதுகாத்த பூமியை, அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்காமல், பணத்தாசை பிடித்து தெரியும் இந்த பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்த மோடி என்னும் பொய்யர் என்ன  உளறியிருக்கின்றார் தெரியுமா? சுற்றுச்சூழல் குறித்து கிஞ்சித்தும் அக்கறையில்லாத இந்த நரமாமிச மோடி மரங்களையும் வெட்டி வீழ்த்தி காடுகள் அழிய துணை போன எப்படி தன்னை மீட்பர் போல கட்டமைக்கின்றார் தெரியுமா?
தனது கோவா பிரச்சாரத்தில்,
“நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.”
“ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்தபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தில்  பணத்தை கொடுக்காமல் எந்த கோப்புகள் விரைவாக நகர்ந்ததே இல்லை. ”
இது மட்டுமில்லாமல், தனது ட்வீட்டர் கணக்கில்
“கோவா மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கினேன்” என்று வேறு  எழுதி தொலைத்திருக்கின்றார்.
            பொய் சொல்வது பாசிஸ்டுகளுக்கு வெட்கமாயிருக்காதுதான். ஆனால்,  இந்த    பொய்களை நம்புபவர்களுக்கு  வெட்கம் வர வேண்டாமா?
[ஜெயந்தி நடராஜனுக்கு பிறகு 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய தடையேதுமில்லாமல் ‘தடையில்லை’ ஆவணத்தை வழன்கும் மொய்லி அமைச்சராக இருப்பதையும், அந்த ஆளை பற்றி மோடி வாய்  திறக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்க]

மன்மோகன் கும்பல் மக்கள் நலனில் கரைதேர்ந்தவர்கள் என்றோ, மிகவும் நேர்மையானவர்கள் என்றோ நாம் கூறவில்லை. அவர்கள் உலக மகா திருடர்களே. ஆனால், மன்மோகனுக்கு மாற்று மோடி கும்பல் என்பது முட்டாள்தனத்தின் உச்சம். காங்கிரஸ் திருடர்கள் சுற்றுச்சூழல் விசயத்திலும் தேர்தல் நெருங்க, நெருங்க கார்ப்பரேட்டுகளுக்கு வேக, வேகமாக உரிமம் வழங்கியதை நாம் அறிவோம்.

ஆனால், அப்படி உரிமம்  வழங்குவதற்கு எதிராக ஒற்றை கேள்வியை இந்த கொலைக்கார கும்பல் கேட்டிருக்குமா? கேட்காது. 
ஏனென்றால், பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே.

நன்றி : இணைப்பு

கருத்துகள் இல்லை: